தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் அரியலூரில் 28ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஜூன் 21: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தி–்ல் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தேசிய அடையாள அட்டை நகலுடன் அளிக்கலாம். கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவி வழங்க ஆவணம் செய்யப்படும். எனவே இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: