அறந்தாங்கி,ஜூன் 21: தமிழகத்தில் நிலவிவரும் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் திண்டாட்டம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அன்றாட அத்தியாவசிய தண்ணீர் கூட கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த இன்னல்கள் நீங்க படைத்த இறைவனிடம் மழை வேண்டி கோரிக்கை வைக்கும் சிறப்புப் பிரார்த்தனைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் கிளைகள் வாரியாக செய்துவருகின்றது.