பெரம்பூர்: நகைக்கடையில் வாடிக் கையாளர் போல் நடித்து 5 லட்சம் நகை களை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின் றனர். வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வருண்குமார் (37). திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் வந்த 2 பெண்கள், ‘‘மோதிரம், கம்மல் வாங்க வேண்டும், மாடல் காட்டுங்கள்’’ என்று கூறியுள்ளனர். அதன்படி, வருண்குமார் கடையில் இருந்த நகை மாடல்களை காண்பித்துள்ளார். நீண்ட நேரம் அவற்றை பார்த்த பெண்கள், எந்த மாடலும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனர்.