திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் தெற்கு மாவட்ட மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு உடனடியாக ஈடுபட வலியுறுத்தி நாளை 22ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் எனது தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்து கொண்டு உரை ஆற்றுகிறார். இதில் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன், சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், நடுகுத்தகை ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்கிறார்.