திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஜமாபந்தி அலுவலர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக செயலாளர் அம்பேத்ஆனந்தன் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு வசிக்கும் 133 குடும்பத்தினருக்கு கடந்த 1978ம் ஆண்டு 5 ஏக்கர் நிலத்தை தனிநபரிடம் இருந்து கைப்பற்றி தலா 3 சென்ட் வீதம் ஆதிதிராவிட மக்களுக்கு தனி வட்டாட்சியரால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.