திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் அருகே, வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 5 பெண்கள் மாயமாகி உள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் அடுத்த நெமிலி அகரம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 18ம் தேதி தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். இவர் இதுவரை வீடு திரும்பாததால் அவரது தாய் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.திருவள்ளூர் அடுத்த சிற்றம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காணிக்கைராஜ் என்பவரது மகள் சுவாதி (19) கடந்த 15ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாய் காந்திமதி கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் திரிபுரசுந்தரி (18) கடந்த 18ம் தேதி தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாய் விஜயா மப்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.