கும்மிடிப்பூண்டி, ஜூன் 19: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில் நேற்று திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவிற்கு, டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, இயக்குனர்கள் ஆ.பழனி, ஆ.விஜயகுமார், ஆ.கபிலன், தே.தினேஷ், கோ.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை, பள்ளி முதல்வர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் விஜிபி தமிழ் சங்கம் சார்பில் 45வது திருவள்ளுவர் சிலையை விஜிபி உலகத்தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார்.