திருவள்ளூர், ஜூன் 19: பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஜமாபந்தி அலவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் க.புனிதவதி வரவேற்றார். தனி வட்டாட்சியர் பரமசிவம், துணை வட்டாட்சியர்கள் ஆர். கோவிந்தராஜ், ராஜேஷ் குமார், விஜயகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 24 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்காண ஆணையிணையும், 45 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவிணையும், 116 பேர் இருக்கு பட்டாவையும், 22 பேருக்கு இதர சான்றிதழ்களையும் வழங்கினார்.