மாணவியிடம் செல்போன் பறிப்பு

திருவொற்றியூர், ஜூன் 19: திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த ரமேஷ் மகள் புனிதவள்ளி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை யோகா வகுப்பு செல்ல திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் அருகே தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், புனிதவள்ளி கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு  தப்பினர்.இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தாங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, செல்போனை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: