குமாரபாளையம் அரசு கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு கலந்தாய்வு துவக்கம்

குமாரபாளையம், ஜூன் 18: அரசு கலை அறிவியல் கல்லூரியில், முதுநிலை பட்ட வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பாட பிரிவுக்கு ஜூலை முதல் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இளநிலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான முதல் மற்றும் இரண்டு கட்ட கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. இந்த பிரிவுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு கூட்டம், வருகிற 28ம் தேதி கல்லூரியில் நடைபெறுகிறது. தற்போது முதுநிலை வகுப்பான தமிழ், ஆங்கிலம், கணிதம், கனிணி அறிவியல், வணிகவியல் பாடங்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பிரிவுக்கான கலந்தாய்வு, வரும் ஜூலை 1ம் தேதி நடக்கிறது. எனவே, இளநிலை வகுப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் வரும் 28ம்தேதி காலை 9.30 மணிக்கும், முதுநிலை வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் ஜூலை 1ம்தேதி காலை 9.30 மணிக்கும், அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு வரவேண்டும். இத்தகவலை கல்லூரி முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: