வேப்பனஹள்ளி, ஜூன் 18: வேப்பனஹள்ளி அருகே தொடக்கப்பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே, கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இப்பள்ளியில் நுழைந்த மர்ம நபர்கள், தலைமை ஆசிரியர் அலுவலக அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த பதிவேடுகளை வெளியில் வீசினர்.