நெல்லை டிஒய்எப்ஐ நிர்வாகி கொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 18 : டிஒய்எப்ஐ நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், காவல்துறையினர் மெத்தன போக்கை கைவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஜாதி வெறியர்களின் ஆதிக்க ஜாதி வெறியை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாகர்கோவில் நகர கமிட்டி சார்பில் வேப்பமூடு பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ேமாகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அகமது உசேன், அந்தோணி, இந்திரா, பழனிசாமி, நாகராஜன், அஜிஸ், லியோ, ரெகுநாதன், பரமசிவம், கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: