சீர்காழி, ஜூன் 14: சீர்காழியில் நடந்த ஜமாபந்தியில் 135 மனுக்கள் குவிந்தன.சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி தொடங்கி 21ம்தேதி வரை நடைபெற உள்ளது. ஜமாபந்தி நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி கலந்துகொண்டு சீர்காழி வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பச்சை பெருமாநல்லூர், ஆர்ப்பாக்கம், உமையாள் பதி, கடவாசல், வரிசைபத்து, வடகால், ஆலங்காடு, மகாராஜபுரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் 135மனுக்களை பெற்று உடனே 56 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 6 பயனாளிக்கு முதியோர் உதவி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.