கரூர், ஜூன் 14: பைபாஸ் ரவுண்டாவில் நெ
ரிசலைக் கட்டுப்படுத்த அணுகு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்புறம் அணுகுசாலை உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகுசாலை வழியாக வந்து செல்கிறது. ரவுண்டானா அணுகு சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சிக்னல் குறைந்தது 4நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நிற்கின்றன. அதேபோல சிக்னல் கிடைத்ததும் அனைத்து வாகனங்களும் சாலை குறுகலாக இருப்பதால் செல்ல முடிவதில்லை. நெரிசலில் ஊர்ந்து செல்வதற்குள் மீண்டும் ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது.