நாமக்கல், ஜூன் 14: திருச்சியில் இருந்து சேலத்திற்கு செல்லும் வழியில், நாமக்கல் மாவட்ட எல்லையான அத்தனூர் பகுதியில் நேற்றிரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து நேற்றிரவு கார் மூலம், நாமக்கல் வழியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றார். இதையொட்டி, நாமக்கல் நகரில் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். முதல்வரின் கார், நாமக்கல் நகருக்குள் வந்தபோது முக்கிய சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.