நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆசியாமரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 14ம் தேதி காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூபர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், விற்பனையாளர், விற்பனை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.