பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு கூடுதல் செயலாளார் நிதித்துறை இயக்குநர் ஓய்வூதிய இயக்குநரகம் கயிலைநாதன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகளை குறித்த குறைதீர்க்கும் மனுக்களை இரண்டு பிரதிகள் 13ம்தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம். மேலும் 21ம்தேதி அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.21ம் தேதி நடக்கிறதுஉடனடியாக வரும் சட்டமன்ற கூட்டதொடரில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.128 கோடியை ஒதுக்கீடு செய்து நீர்த்தேக்கம் கட்டும் பணியை துவக்க வேண்டும்.

Related Stories: