நாகை புனித அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்

நாகை, ஜூன் 13: நாகை புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஊரார் உபய பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு (11ம் தேதி) தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள், கொடி ஊர்வலம், அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி ஆகியவை நடந்தது. கொடிஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்து. பின்னர் திருப்பலி நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. பங்குத் தந்தை வின்சென்ட்தேவராஜ் திருப்பலிகளை நிறைவேற்றினார். உதவி பங்குத் தந்தை விட்டல் பிரசாத் மற்றும் உபயதாரர்கள், இறை மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: