கோவையில் பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு

கோவை, ஜூன்13: கோவையில் 2 பெண்களிடம் 9 பவுன் நகையை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை போத்தனூர் சபரி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் லலிதா(68). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் லலிதாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இது தொடர்பாக லலிதா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். இதேபோல், கோவை கணபதி போலீஸ் காலனியை சேர்ந்தவர் சித்ரா(50). இவர் நேற்று முன் தினம் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் 2 பேர் சித்ரா கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: