அலங்காநல்லூர், ஜூன் 12: பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சிக்குட்பட்டது கெங்கமுத்தூர். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் நடந்து வந்தது. மேலும் தேவையை சமாளிக்க காவிரி கூட்டுக்குடிநீரும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போர்வெல்கள் வறண்டு தண்ணீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. தவிர காவிரி கூட்டுக்குடிநீரும் முறையாக வருவதில்லை. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வாரம் ஒருமுறை வரும் தண்ணீரும் துர்நாற்றத்துடன் புழு பூச்சிகள் கலந்து வருகிறது. இதுகுறித்து யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.