போடி, ஜூன் 12: போடி மேற்கு மற்றும் வடக்கு மலைப்பகுதிகளில் அகமலை, முதுவாக்குடி, சிரக்காடு, முட்டம் போன்ற மலைக்கிராம மக்களுக்கு பல வருடங்களாகவே பட்டா கிடைக்காமல் இருந்தது. எனவே பட்டா வழங்க வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நான்கு நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது. இதில் மலைவாழ் மக்கள் திரண்டு வந்து பட்டா கேட்டு மனுக்கொடுத்தனர். அந்த மனு உடனடியாக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பட்டா வழங்கிட சாத்தியம் இருப்பதை சக அதிகாரிகள் விளக்கினர்.