நத்தம், ஜூன் 12: நத்தம் பகுதியை கலக்கிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், எஸ்.கொடையை பகுதியை சேர்ந்த குமார்(42) என்பவர் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பாலம் அருகே நடந்து சென்றார். அவ்வழியாக டூவீலரில் வந்த கும்பல், குமாரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியது. சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்லா, சாந்தா மற்றும் தனிப்படை போலீசார் கும்பலை தேடி வந்தனர்.