அரியலூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி சித்திரை பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளது. அதில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஆடுதுறை -5 ரக உளுந்து சித்திரை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடி தற்போது நிலவும் கடும் கோடை வெப்பநிலை காரணமாக மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்டு உளுந்து வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. வெள்ளை ஈ என்ற பூச்சி இந்த நோயை பரப்பி உளுந்து செடியின் சாற்றை உறிஞ்சி மஞ்சள் நிறமாக மாற்றி செடியின் வளர்ச்சியை குறைக்கிறது.