கும்பகோணம், ஜூன் 12: ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனசாக வழங்க வேண்டுமென ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மூன்றாவது வட்ட மாநாடு நடந்தது. வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு 21 மாதம் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனஷாக வழங்க வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை திட்டம் ஓய்வூதியர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்பெறுமாறு பிற மாநிலங்களிலும் உள்ளதைபோல் தமிழக அரசு ஏற்று நடத்ம வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்துள்ள 9.2 டிஎம்சி தண்ணீரை விவசாய குறுவை சாகுபடிக்கு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் டவடிக்கை எடுக்க வேண்டும்.