திருவள்ளூர், ஜூன் 12: திருவள்ளூரில் உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அலுவலரை ஓட்டல் உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் உணவு மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள முனியாண்டி அசைவ ஓட்டலில், உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும், சமைக்கப்படும் கோழி, ஆடு ஆகிய கறியும் தரமில்லாத வகையில் இருப்பதாகவும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்திக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் நேற்று பிற்பகல் ஓட்டலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த ஓட்டல் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘’தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மாற்றம் செய்கிறீர்களா’’’’ அதிகாரி சுந்தரமூர்த்தி விசாரித்தார். அப்போது ‘’உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா என வாக்குவாதம் செய்து உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தியை ஓட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது.