திருச்சி, ஜூன் 11: திருச்சி கருமண்டபத்தில் பைக்கில் சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் 14 பவுன் ெசயின் பறித்த காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்ததால் படங்களை போலீசுக்கு தெரிவிக்கும்படி மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோடு கருமண்டபம் அருகில் கடந்த மே 26ம் தேதி மகனுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற 50 வயது மதிக்கதக்க பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் செயினை பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.