திருவெறும்பூர், ஜூன் 11: பெல் நிறுவனத்தை சார்ந்திருக்கும் நிறுவனங்கள் ஆர்டர் இல்லாமல் கடன் நெருக்கடியாலும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நடந்த திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தின் 2வது மாவட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சிஐடியூ தொழிற்சங்கத்தின் 2வது மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளார் வரவு செலவு அறிக்கையை படித்தார். மாநில துணைத்தலைவர் திருவேட்டை, துணைப் பொதுச்செயலாளர் திருச்செல்வம் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டனர். கூட்டத்தில் பெல் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு உள்ள சலுகைகளை முறைப்படுத்துவதோடு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள சமவேலைக்கு சம ஊதியத்தை வழங்க வேண்டும்.