நாவல் பழம் விற்பனை ஜோர் திருவையாறு அருகே 20 குடும்பங்களுக்கு தீ விபத்து நிவாரண உதவி

திருவையாறு, ஜூன் 11: திருவையாறு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. திருவையாறு அடுத்த சின்னகண்டியூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினருமான பழனிமாணிக்கம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் சிவகங்கரன், மாவட்ட அவைத்தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் அரசாபகரன், வழக்கறிஞர் ராஜாமுகமது மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் நாள் ஆறுதல் கூறி தலா ரூ 2 ஆயிரம் வீதம் 20 குடும்பங்களுக்கு வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: