திருவையாறு, ஜூன் 11: திருவையாறு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. திருவையாறு அடுத்த சின்னகண்டியூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினருமான பழனிமாணிக்கம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.2 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.