விவசாயிகள் வேதனை நாகையில் ஜமாபந்தி துவக்கம்

நாகை, ஜூன் 7: நாகை மாவட்டத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.

முதல் நாளான நேற்று திருகண்ணபுரம் சரகத்தில் உள்ள அம்பல், பொறக்குடி , கிடாமங்கலம், ஏர்வாடி, கோட்டப்பாடி, திருப்புகழுர், கொங்கராயநல்லூர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம் உள்பட 10 கிராமங்களில் நடந்தது.

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாவட்ட அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். தாசில்தார் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதியோர் உதவி தொகை, திருமண உதவி உட்பட 112 மனுக்கள் வந்தது.

Related Stories: