க.பரமத்தி, ஜூன் 7: கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதியில் நான்கு சாலையில் ஒரே இடத்தில் சந்திப்பதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தானியங்கி சிக்னல் லைட் அமைத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதி அமைந்துள்ளது. இப்பகுதி 5க்கும் மேற்பட்ட ஊராட்சியினை சேர்ந்த பொதுமக்கள் சந்திக்கும் முக்கிய கடைவீயாக உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேசன், வாரச்சந்தை, போஸ்ட் ஆபீஸ், பஞ்சாயத்து அலுவலம், விஏஓ அலுவலகம், ஆர்.ஐ அலுவலகம், மளிகை கடைகள், டீ மற்றும் ஓட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்கள் உள்ளன.அலுவலகம் மற்றும் கடைகளில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள க.பரமத்தி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக க.பரமத்தி நான்கு வழி சந்திப்பில் கூடுகின்றனர்.