கரூர், ஜூன் 7: பைபாஸ் சாலையோரம் வாகன உதிரிபாகங்களின் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுஏற்படுகிறது.
கரூரில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் இருந்து பெரிச்சி பாளையம் செல்லும் சாலை ஓரத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்களின் கழிவுகளை கொட்டி பின்னர் அவற்றை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் துர்நாற்றத்துடன் புகைஎழுகிறது. இப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மோட்டார் வாகனங்களை பழுதுபார்க்கும் கடை வைத்திருப்போர் கழிவுகளை குப்பையில் கொட்ட வேண்டும். உள்ளாட்சி அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.