காரைக்குடி, ஜூன் 5: காரைக்குடி நகராட்சி வார்டு 3, அண்ணா நகர், ஊத்துப்பிளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கொசு தொல்லை அதிகம் உள்ளது. காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பெரும்பாலான கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் அனைத்தும் கழிவு நீர் கால்வாயில் அடைத்து கொண்டும் உள்ளது. இதனால் கொசு உற்பத்தி ஆகும் இடமாக திகழ்கிறது. காரைக்குடி நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. பல வார்டுகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் மண் அருகில் இருக்கும் கழிவு நீர் கால்வாயையும் அடைத்துக்கொள்கிறது. இதனால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகிறது.