லாரி மோதி துப்புரவு தொழிலாளி பலி

தாம்பரம், ஜூன் 5: அனகாபுத்தூர் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் முருகன் (45). இவரது மனைவி கலைவாணி (32). முருகனின் மைத்துனர் அரவிந்த் (19). பல்லாவரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள்.நேற்று அதிகாலையில் 3 பேரும், செந்நீர்மலை மேம்பாலம் அருகே பணியை முடித்துவிட்டு, குப்பை அள்ளும் வாகனத்தில் குரோம்பேட்டைக்கு சென்றனர். அங்கு, சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அப்போது, தாம்பரம் நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி, 3 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். கலைவாணி, அரவிந்த் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த கலைவாணி, அரவிந்த் ஆகியோரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். முருகன் சடலத்தைகுரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: