தாம்பரம், ஜூன் 5: அனகாபுத்தூர் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் முருகன் (45). இவரது மனைவி கலைவாணி (32). முருகனின் மைத்துனர் அரவிந்த் (19). பல்லாவரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள்.நேற்று அதிகாலையில் 3 பேரும், செந்நீர்மலை மேம்பாலம் அருகே பணியை முடித்துவிட்டு, குப்பை அள்ளும் வாகனத்தில் குரோம்பேட்டைக்கு சென்றனர். அங்கு, சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அப்போது, தாம்பரம் நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி, 3 பேர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். கலைவாணி, அரவிந்த் படுகாயமடைந்தனர்.