புதுக்கோட்டை, ஜூன்4: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் நேற்று காலை இறைவணக்கத்துடன் தொடங்கின. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கு வந்த புதிய மாணவ, மாணவிகளை சக மாணவிகள் பூ கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.
மேலும் நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். விடுதிகளில் தங்கி பயிலும் சில மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பெட்டி, படுக்கைகளுடன் அவர்கள் வந்திருந்தனர். புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று எல்கேஜி., யூகேஜி.க்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.