பெரியகுளம் டாஸ்மாக்கில் சூப்பர்வைசருக்கு பாட்டில் குத்து

பெரியகுளம், ஜூன் 4:  தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் நல்லதம்பி. அதே கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்ப்பவர் பரமசிவன். கடந்த 1ம் தேதி மேற்பார்வையாளர் நல்லதம்பி டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்துள்ளார். விற்பனையாளர் பரமசிவன் கடைக்கு வேலைக்கு வரவில்லை. இரவு பத்து மணிக்கு கடையை பூட்டி விட்டு மேற்பார்வையாளர் நல்லதம்பி வீட்டிற்கு செல்லும்போது பரமசிவன் வந்து கடையை திறந்து பாட்டில் எடுத்து தா என்று கேட்டுள்ளார்.

அதற்கு நல்லதம்பி கடையை பூட்டி விட்டதாகவும், மீண்டும் திறக்க முடியாது என்று கூறியதால் அருகிலிருந்த பாட்டிலை எடுத்து நல்லதம்பியை குத்தி காயப்படுத்தியதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: