பெரியகுளம், ஜூன் 4: தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் நல்லதம்பி. அதே கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்ப்பவர் பரமசிவன். கடந்த 1ம் தேதி மேற்பார்வையாளர் நல்லதம்பி டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்துள்ளார். விற்பனையாளர் பரமசிவன் கடைக்கு வேலைக்கு வரவில்லை. இரவு பத்து மணிக்கு கடையை பூட்டி விட்டு மேற்பார்வையாளர் நல்லதம்பி வீட்டிற்கு செல்லும்போது பரமசிவன் வந்து கடையை திறந்து பாட்டில் எடுத்து தா என்று கேட்டுள்ளார்.