பட்டுக்கோட்டை, மே 30: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 2வது சாம்பியன்சிப் பேட்மிட்டன் போட்டி நடந்தது.இதில் பட்டுக்கோட்டை அடுத்த பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் டயன்டோனிரிட்ஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடமும், இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். சாதனை படைத்த மாணவர் டயன்டோனிரிட்ஸை பள்ளி தாளாளர் சுவாமிநாதன், செயலாளர் சரவணன் ஆகியோர் கவுரவித்தனர். விழாவில் பள்ளி இயக்குனர்கள் ராமையா, கோபாலகிருஷ்ணன், ரத்தினக்குமார், ராஜமாணிக்கம், மோகன், டாக்டர்கள் கவுசல்யா ராமகிருஷ்ணன், கண்ணன், பிரசன்னா, தலைமையாசிரியர் முகமது அக்பர்அலி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.சிஐடியூ மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம்தஞ்சை, மே 30: தஞ்சை மாவட்ட சிஐடியூ 14வது மாநாடு வரும் ஜூலை 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி தஞ்சை பாலாஜி நகரில் சிஐடியூ மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடந்தது.