பெரம்பலூர், மே 30: பெரம்பலூரில் ஐஓபி சார்பில் இலவசமாக நடத்தப்படும் எம் ப்ராய்டரி, ஆரி, மகம் வேலைப்பாடு குறித்த பயிற்சியில் சேர விரும்புவோர் நாளை (31ம் தேதி) நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமைய இயக்குனர் அகல்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பெரம்பலூர் சங்குப்பேட்டை, ஷெரீப் காம்ப்ளக்சில் இயங்கி வரும் ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதிமுதல் எம்ப்ராய்டரி, ஆரி, மகம் வேலைப்பாடு குறித்தப் பயிற்சி வகுப்பு இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதிற்கு குறைந்தவராகவும், எழுதபடிக்கத் தெரிந்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயதொழில்தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.பயிற்சிமைய வளாகத்திலேயே தொடர்ந்து 30 நாட்களுக்கு எம்ப்ராய்டரி, ஆரி, மகம் வேலைப்பாடுகள் குறித்தப் பயிற்சிகள் இலவசமாக நடைபெறும். காலை 9.30 மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெறும். பயிற்சி காலத்தில் காலை, மதியஉணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.