குன்னூர், மே 30: குன்னுார் ரேலியா அணையில் தண்ணீர் வறண்டு காணப்படுவதால் குன்னூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் குன்னூரில் உள்ள 30 வார்டிற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக குன்னூர் பகுதிக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.