திருவள்ளூர், மே 30: ஓட்டல்கள், டீக்கடை உட்பட பல்வேறு இடங்களில் உணவு பரிமாற, பார்சலுக்கு பயன்படுத்திய பாலிதீன், சில்வர் கோட்டிங் பேப்பர்கள் தடை செய்யப்பட்டன. இதனால் வாழை இலை விற்பனை அதிகரித்தது. தற்போது மீண்டும் பாலிதீன் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால் வாழை இலை விற்பனை சரிந்து வருகிறது. உடல் நலத்தை கெடுக்கும் பாலிதீனில் தயாரிக்கும் கேரி பேக் உட்பட 14 பொருட்களை அரசு தடை செய்தது. கேரி பைக்கு மாற்றாக பேப்பர் பைகளை வியாபாரிகள் பயன்படுத்துகிறார்கள். அதிகாரிகள் கண்காணிக்காததால் சில ஓட்டல்களில் உணவு, வடைகள் பரிமாற சில்வர் கோட்டிங் பேப்பர் மற்றும் டீ, காபி, சாம்பார் பார்சல் செய்ய பாலிதீன் பைகள் பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘’திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாழை சாகுபடி அதிகம் நடக்கிறது. ஓட்டல்கள், கல்யாண வீடுகளுக்கு உணவு பரிமாற தேவையான வாழை இலைகளை உற்பத்தி செய்து வழங்குகிறோம்.