பொன்னமராவதி,மே 29: பொன்னமராவதியில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்துகளில் ஒருசில பேருந்துகளில் டிக்கெட் ரூ.50 என்பதை ரூ.65 என வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொன்னமராவதியில் இருந்து திருச்சிக்கு அதிக அளவு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகிறது. ஒருசில அரசு பேருந்துகளில் ஒரு டிக்கெட் ரூ.50ம், ஒருசில பேருந்துகளில் ஒரு டிக்கெட் ரூ.65ம் வசூல் செய்யப்படுகிறது.தனியார் பேருந்துகளில் ரூ.50 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்க அரசு பேருந்தில் ரூ.65 வசூல் செய்வது எந்த வகையில் நியாயம் என பயணிகள் புலம்புகின்றனர்.