நாகர்கோவில், மே 29 : மோடி படத்தை அவமதித்து பேஸ்புக் பதிவு வெளியிட்ட நபரை கைது செய்ய வேண்டும் என பா.ஜ. நிர்வாகிகள் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மதியம் எஸ்.பி. நாத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திங்கள்சந்தை பூசாஸ்தான்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் மோடியின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை மோசமாக சித்தரித்து பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பாரதிய ஜனதாவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் இந்த பதிவு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் தந்து இருக்கிறது.