திருப்பூர், மே 28:திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி பகுதியில் பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேச இளைஞர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று அப்பகுதிக்கு சென்று போலீசார் அங்கு வாடகைக்கு வீட்டில் வசித்து வந்த வங்கதேச இளைஞர்கள் 16 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.