திருப்பூர் 16 வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை

திருப்பூர், மே 28:திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி பகுதியில் பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேச இளைஞர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று அப்பகுதிக்கு சென்று போலீசார் அங்கு வாடகைக்கு வீட்டில் வசித்து வந்த வங்கதேச இளைஞர்கள் 16 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாநகர போலீசார் கூறுகையில், ‘‘பிடிபட்ட அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தின் முகவரி கொண்ட அடையாள ஆவணங்களை வைத்துள்ளனர். ஆனால் காவல் துறை விசாரணையில் வங்கதேசத்திலிருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.  அவர்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து விசாரித்து வருகிறோம். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் சிலரைத் தேடி வருகிறோம்,’’ என்றனர்.

Related Stories: