தஞ்சை, மே 28: தஞ்சை மாவட்டத்தில் வருகிற 30ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் ஜமாபந்தி என்ற வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1428 பசலிக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெற உள்ளது. தஞ்சை வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் தலைமையிலும், பூதலூர் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவையாறு வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பாபநாசம் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் வரும் ஜூன் 11ம் தேதி வரை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பேராவூரணி வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையிலும், ஒரத்தநாடு வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கும்பகோணம் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தலைமையிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் வரும் 30ம் தேதி முதல் வரும் ஜூன் 7ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை நீங்கலாக தினமும் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.