சீர்காழி, மே 28: சீர்காழி பகுதியில் பருத்தி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு, மங்கைமடம், கீழ சட்டநாதபுரம், திருவாலி, நெப்பத்தூர், திருநகரி, புது துறை, காத்திருப்பு, அல்லி விளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், இளைய மதுக்கூடம், வைத்தீஸ்வரன் கோயில், கதிராமங்கலம், எட குடிவடபாதி கீழ ச்சாலை, தென்னலக்குடி, புத்தூர், மாதானம், பச்சை பெருமாநல்லூர், அரசூர், எருக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டிருந்தனர். தற்போது இந்த பருத்திகள் வெடித்து அறுவடைக்கு தயாராக உள்ளன. வெடித்த பருத்தியை விவசாயிகள் ஆட்களை வைத்து எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருத்தி ஒரு குவிண்டால் ரூ.4,600 விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பருத்தியின் விலை மாறுபடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றன.