சூளகிரி, மே 28: சூளகிரி தாலுகாவில் நடப்பாண்டு மா விளைச்சல் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சூளகிரி தாலுகாவில் உள்ள சூளகிரி, பி.எஸ் திம்மசந்திரம், காட்டுநாயக்கன்தொட்டி, பேரிகை, அத்திமுகம், நெரிகம், கும்பளம், காளிங்காவரம், மாரண்டபள்ளி, தொட்டூர், ஒட்டர்பாளையம், அணாசந்திரம், மகுதாண்டபள்ளி, எலசேபள்ளி, வெங்கடேசபுரம், காமன்தொட்டி, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி, தேனதூர்க்கம், அலேசிபம், உலகம், மேலுமலை, மேடுபள்ளி, ஏனுசோனை, வேம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் மா பயிரிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மா விளைச்சல் அதிகரிக்கிறது. இந்த மாதங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களை குத்தகைக்கு விடுவது வழக்கம்.