குன்றத்தூர், மே 28: மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (33). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்.கடந்த சில நாட்களுக்கு முன் நந்தகுமார், தனது சொந்த ஊரான கும்பகோணம் சென்றார்.
நேற்று காலை நந்தகுமார் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுஉடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ லாக்கரில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.