திருச்சுழி, மே 25: திருச்சுழி அருகே கோயில் திருவிழவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள வீரன்சூரன் கோயில் திருவிழா முன்னீட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். முதன் முதலாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிகட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு கட்டில், பீரோ, அண்டா, வெள்ளி காசுக்கள் வழங்கப்பட்டது.