மணமேல்குடி சங்கிலி கருப்பர் கோயில் பூத்தட்டு ஊர்வலம்

மணமேல்குடி,மே.25: மணமேல்குடி சங்கிலி கருப்பர் கோயில் வைகாசி திருவிழா காப்பு காட்டும் விழா நடந்தது. அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் வடக்கூர் அம்மன் கோயிலிருந்து பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி மணமேல்குடி நகர கடைவீதி வழியாக வந்து சங்கிலி கருப்பர் சுவாமிக்கு சாற்றி வழிபட்டனர் .தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: