காஞ்சிபுரம், மே 25: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் வாலாஜாபாத் உமா சேகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, வசந்தமாலா, தசரதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.