சேந்தமங்கலம், மே 25: புதன்சந்தை அடுத்த திப்பக்காப்பட்டி காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. நேற்று முன்தினம், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு வடிசோறு சமைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.